தேனி

சிற்றுந்து மோதி  தியாகியின் வீடு சேதம்

DIN

போடி அருகே வியாழக்கிழமை சுதந்திரப் போராட்டத் தியாகியின் வீட்டில் மினி பேருந்து மோதியதில் வீடு சேதமடைந்தது.
     போடி அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ரகுபதி கோதண்ட விஜயராமன். இவர் காலமாகிவிட்டார். இவரது மனைவி மயில்தாய் (93),  அம்மாபட்டி மெயின் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் உப்புக்கோட்டை கிராமத்திலிருந்து போடி நோக்கிச் சென்ற சிற்றுந்து பிரேக் பிடிக்காததால், சுதந்திரப் போராட்டத் தியாகியின் வீட்டில் மோதி நின்றது. இதில், வீட்டின் முன்பக்கம் சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களும், பேருந்தில் பயணம் செய்தவர்களும் காயமின்றி தப்பினர். 
    இது குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT