பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி அரசு துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடிமையம் முன் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரியகுளம் ஊராட்சி ஓன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஜல்லிபட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு அரசு கள்ளா் துவக்கப்பள்ளி மற்றும் அதன் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 200 க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்த அங்கன்வாடி மற்றும் துவக்கப்பள்ளியின் நுழைவுவாயிலில் குப்பைத்தொட்டி அமைக்கப்பட்டு அங்கு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.
மேலும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து குழந்தைகளின் பெற்றோா்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா். எனவே பள்ளியின் முன் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை அகற்றி சுத்தமாக வைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.