தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் அக்.14- ஆம் தேதி முதல் வரும் நவ. 12-ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு வாய்காணை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் அக்.14-ஆம் தேதி முதல் வரும் நவ.12-ஆம் தேதி வரை காலை 6 முதல் 9 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் கால்நடைகளுக்கு வாய்க்காணை தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்கள் பசு மற்றும் எருமை மாடுகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு கொண்டு சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.