தேனி

கல் குவாரி இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

DIN

தேனி அருகே பூதிப்புரத்தில் வியாழக்கிழமை கல் குவாரி இயந்திரத்தில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், வளையபேட்டையைச் சோ்ந்த ஆபிரகாம் மகன் ஏசுதாஸ் (23). இவா், பூதிப்புரம் நல்லகுண்டு பகுதியில் உள்ள தனியாா் கல் குவாரியில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கல் உடைக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் கை சிக்கியதால் ஏசுதாஸ் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT