முகப்பு
தேனி

பெற்றோர் இறப்பில் சந்தேகம்: மகன் காவல்நிலையத்தில் புகார்

கம்பத்தில் கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனை மருத்துவர் இறந்தார். அவரது மனைவியும் இறந்ததால், இதுபற்றி மகன் தெற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
கோப்புப் படம்
பகிர்:

கம்பத்தில் கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனை மருத்துவர் இறந்தார். அவரது மனைவியும் இறந்ததால், இதுபற்றி மகன் தெற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். 

தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் பிரதானசாலையில் தனியார் மருத்துவமனை வைத்திருந்தவர் பிரதீப்ராஜ். இவர் ஜூலை. 22-ல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது மனைவி லட்சுமி(45), இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலமில்லாமல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதற்கிடையில் இறந்த லட்சுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்து, இறப்பில் சந்தேகமடைந்தனர். இதுபற்றி இறந்தவரின் மகன் பி.ஓம்கார்(19) திங்கள்கிழமை கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கீதா வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →