இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
மும்பை இந்தியன்ஸில் இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குர் குறித்து...
மும்பை இந்தியன்ஸில் இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குர் பேட்டிங்கும் செய்யாமல் பந்தும் வீசாமல் வித்தியாசமான சாதனை படைத்துள்ளார்.
வான்கடேவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 243/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 18. 4 ஓவர்களில் 249/4 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை பந்துவீசும்போது ஷர்துல் தாக்குர் இம்பாக்ட் வீரராக ராபின் மின்ஸுக்குப் பதிலாக 8ஆவது ஓவரில் களமிறக்கப்பட்டார்.
Advertisement
மும்பை அணி முதல் போட்டியில் வெல்ல முக்கியமான காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருது வென்ற ஷர்துல் தாக்குருக்கு ஒரு பந்துகூட வீச வாய்ப்பு வழங்கவில்லை என்பது ஆச்சரியமளித்தது.
பந்துவீசவில்லை எனில் அவரை ஏன் இம்பாக்ட் வீரராக களமிறக்க வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஹார்திக் பாண்டியா மீது மும்பை ரசிகர்கள் மிகுந்த கோப்பத்தில் இருக்கிறார்கள். ஐபிஎல் வரலாற்றிலேயே இப்படி நடக்கவில்லை எனக் கூறுகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. மீதமிருக்கும் 6 போட்டிகளில் வென்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப்ஸ் செல்லும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.