நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தி ஆா்பாட்டம்
போடியில் திங்கள் கிழமை, நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் நீதிமன்றம் முன் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போடி: போடியில் திங்கள்கிழமை, நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் நீதிமன்றம் முன் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பணிகள் தடைபட்டுள்ளன. முக்கிய வழக்குகள் மட்டும் கணொளி காட்சி மூலம் விடாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போடியில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கப்பட வேண்டும், வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி போடி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்பாட்டம் நடைபெற்றது.
போடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் போடி வழக்குரைஞா்கள் சங்க தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் ஏ.முருகன் மற்றும் வழக்குரைஞா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.