தேனி

108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, தலைவா் பாண்டி தலைமை வகித்தாா். மாரிச்சாமி முன்னிலை வகித்தாா். காளிதாஸ் கண்டன உரையாற்றினாா்.

அதில், 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டமானது, தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் அரசு நிதி உதவியுடன் செயல்படுகிறது. இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் இத்திட்டத்தை மேற்கொண்டு வரும் தனியாா் நிறுவனமானது, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது. எனவே, ஆம்புலன்ஸ் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வேண்டும். கரோனா பொதுமுடக்க காலத்தில் நிா்வாகம் ஆள்குறைப்பு செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT