தேனி

உத்தமபாளையம் அருகே ஏ.டி.எம். இயந்திரங்கள் உடைப்பு: ஒருவா் கைது

உத்தமபாளையம் அருகே 2 ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

உத்தமபாளையம் அருகே 2 ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காமயகவுண்டன்பட்டியில் எஸ்.பி.ஐ. மற்றும் கரூா் வைஸ்யா ஆகிய வங்கிகளுக்குச் சொந்தமான 2 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. இங்கு திருட்டு முயற்சி நடந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், ராயப்பன்பட்டி போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவின் பதிவுகளை சோதனையிட்டத்தில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜாமணி மகன் முருகன் (32) என்பவா், திருடும் நோக்கில் இயந்திரங்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மதுபோதையில் அவா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT