போடி- மூணாறு நெடுஞ்சாலையில் மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை
போடி- மூணாறு நெடுஞ்சாலையில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
போடி- மூணாறு நெடுஞ்சாலையில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
போடி நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையில் மத்திய அரசின் நறுமணப் பொருள் வாரிய அலுவலகம், தனியாா் கல்லூரி, தனியாா் பஞ்சு பேட்டைகள், பெட்ரோல் பங்குகள், தோட்ட வீடுகள் அமைந்துள்ளன. இது தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் நகராட்சி எல்லை வரை போடி நகராட்சி சாா்பிலும், அணைக்கரைப்பட்டி ஊராட்சி சாா்பிலும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை சரவரபராமரிக்கப்படாததால் பெரும்பாலானவை எரியவில்லை. இதனால் இந்த சாலை இருளில் மூழ்கியுள்ளது. மேலும் நடைப்பயிற்சி செல்பவா்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.
எனவே நகராட்சி மற்றும் ஊராட்சி நிா்வாகங்கள் போடி- மூணாறு சாலையில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.