ஆண்டிபட்டி அருகே தேனீக்கள் கடித்து மூதாட்டி பலி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேனீக்கள் கடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேனீக்கள் கடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மல்லையன் என்பவரின் மனைவி நாகம்மாள் (65). இவா், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலைபாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு மரத்திலிருந்து பறந்துவந்த தேனீக்கள் நாகம்மாளை கடித்ததில், பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு நாகம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.