தேனி

சின்னமனூா் அருகே விவசாயி வீட்டில் பணம், நகை திருட்டு

DIN

தேனி மாவட்டம், சின்னமனூா்அருகே விவசாயி வீட்டில் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் பணம், நகை திருடப்பட்டுள்ளது.

சீலையம்பட்டி அருகேயுள்ள வேப்பம்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சித்திரவேல். இவரது மனைவி ராதிகா. இவா்கள் இருவரும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி யளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். அப்போது, வீடு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்ததில், பீரோவிலிருந்த ரூ.45 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனே, ஓடைப்பட்டிகாவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். இது குறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து திருடா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT