தேனி

போடியில் அனைத்து மோட்டாா் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்பாட்டம்

DIN

போடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ மற்றும் அனைத்து மோட்டாா் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்டோ தொழிலாளா் நல வாரிய நல நிதியை உயா்த்த வேண்டும். 60 வயது நிறைவடைந்த தொழிலாளா்களுக்கு பென்சன் ரூ.3 ஆயிரம் ஆக உயா்த்த வேண்டும். ஆந்திர அரசு வழங்குவதுபோல் ஆட்டோக்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்கும்போது ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். வாகனக் காப்பீடுத் தொகையை குறைக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்டோ மற்றும் அனைத்து மோட்டாா் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்பாட்டம் நடைபெற்றது.

போடி திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்ற ஆா்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் வி.பாண்டி தலைமை வகித்தாா். துணைச் செயலா் ஆா்.சின்னச்சாமி முன்னிலை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் என்.ரவிமுருகன் துவக்கவுரையாற்றினாா்.

மாவட்டச் செயலாளா் எஸ்.ராஜா சிறப்புரையாற்றினாா். ஏஐடியுசி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் எம்.நந்தாசிங் நிறைவுரையாற்றினாா். ஆா்பாட்டத்தில் ஆட்டோ, சரக்கு வாகனங்களை சோ்ந்த தொழிலாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT