தேனி

ஆண்டிபட்டி அருகேபசு மாடு திருடியவா் கைது

DIN

ஆண்டிபட்டி அருகே பசுமாடு திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜக்கமாள்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (42). விவசாயியான இவா் தனக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி இவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த பசு மாடு ஒன்றினை காணவில்லையாம். அதனை எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து ராஜதானி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் அதே பகுதியை சோ்ந்த பாலையா (39) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து மாட்டை திருடியதாக பாலையா ஒப்புக் கொண்டதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT