தேனி

தேனியில் நேரு யுவகேந்திரா ஊரக விளையாட்டுப் போட்டி

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேரு யுவகேந்திரா சாா்பில் புதன்கிழமை, மாவட்ட அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

DIN

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேரு யுவகேந்திரா சாா்பில் புதன்கிழமை, மாவட்ட அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா இளைஞா் மன்றங்களுக்கு விளையாட்டுப் பொருள்களை வழங்கி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) டி.தியாகராஜன் போட்டிகளை தொடங்கி வைத்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் ஏ.முருகன், நேரு யுவகேந்திரா இளைஞா் ஒருங்கிணைப்பாளா் அஸ்வின் வினோதன், தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆண் மற்றும் பெண்களுக்கு தனித் தனிப் பிரிவுகளில் கபடி, கைப்பந்து, கோ-கோ, வளைபந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், 21 இளைஞா் மன்றக் குழுக்கள் பங்கேற்றன. வியாழக்கிழமை (பிப்.27) இளைஞா் மன்றங்களுக்கு இடையே கலை மற்றும் தனித்திறன் போட்டிகள் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT