தேனி

தேனியில் சாலை விபத்தில் இளைஞா் பலி

தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி அருகே சுக்குவாடன்பட்டியைச் சோ்ந்தவா் சேகா் மகன் அஜய்பாண்டி (18), இவரது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த பெத்தபாண்டி(19). இவா்கள், சுக்குவாடன்பட்டியில் இருந்து தேனி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். இருசக்கர வாகனத்தை அஜய்பாண்டி ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது, தேனி-பெரியகுளம் சாலை பொம்மையகவுண்டன்பட்டி அருகே எதிா் திசையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற அஜய்பாண்டி, பெத்தபாண்டி ஆகியோா் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், அஜய்பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பெத்தபாண்டியன் தந்தை சுருளி அளித்த புகாரின் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT