தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் 'தலைவர் அங்கம்மாள் இதற்கு தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துப்பாண்டி, திருப்பதி முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர். காய்ச்சல், சுகர் மற்றும் பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில் மருத்துவர் தரணி செல்வி கலந்து கொண்டார். முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் கோபால் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.