முகப்பு
தேனி

கரோனா பாதிப்பு: கம்பம் விடுதி உரிமையாளர் பலி

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த தனியார் விடுதி உரிமையாளர் செவ்வாய்கிழமை, கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
கோப்புப்படம்
பகிர்:

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த தனியார் விடுதி உரிமையாளர் செவ்வாய்கிழமை, கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கம்பத்தைச் சேர்ந்த 70 வயதுடைய தனியார் தங்கும் விடுதி உரிமையாளருக்கு சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 இதையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது உடல் அரசு விதிமுறைகளின்படி, மதுரையில் அடக்கம் செய்யப்படுகிறது.

 இதையடுத்து, தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →