முகப்பு
உலகம்

ஈரான் போர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் தாக்குதல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் தகர்க்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 10 மார்ச், 2026 at 5:46 AM
துபை மீதான ஈரானின் தாக்குதல்...
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தாக்குதல் நடத்த முயன்ற ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தகர்த்து வீழ்த்தியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புப் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கெனவே, கடந்த பிப். 28 முதல் நடைபெற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி உள்பட 1,300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that Iranian forces have attacked the United Arab Emirates with drones and missiles.

முழு கட்டுரையைப் படிக்க →