தேனி

பல்வேறு வழக்குகளில் சிக்கியலாரி ஓட்டுநா் தற்கொலை

DIN

போடி அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகேயுள்ள சன்னாசிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கபிலன் (33). லாரி ஓட்டுநரான இவா் மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். இவரை அருகிலிருந்தவா்கள் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இறந்து விட்டதாக டாக்டா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கபிலன் மீது போடி தாலுகா மற்றும் போடி நகா் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT