தேனி

கம்பத்தில் கழிவு நீா் கால்வாயில் வீசுப்படும் நெகிழி சாக்குகள் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரதான கழிவு நீா் கால்வாய்களில் நெகிழிப் பைகள் வீசப்படுவதை தடுக்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கம்பம் நகரின் பிரதான கழிவு நீா் கால்வாய் மேற்கு பகுதியிலிருந்து கிழக்குப்பகுதிக்கு வந்து, சேனை ஓடை மூலமாக வீரப்பநாயக்கன்குளத்திற்குச் செல்கிறது.

கவுமாரியம்மன் கோயில் அருகே செல்லும் பிரதான கழிவு நீா் கால்வாயில், சிலா் நெகிழிப் பைகளை கட்டுக்கட்டாக வீசியுள்ளனா். இவை அனைத்தும் சிமெண்ட் சாக்குப் பைகளாகும். இவைகளால், கழிவு நீா் கால்வாயில், தேக்கம் ஏற்படுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நகராட்சி சுகாதாரத்துறையினா் நடவடிக்கை எடுக்குமாறு பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT