சீலையம்பட்டியில் நெல் நடவுப் பணிகள் தீவிரம்
தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் ஒரு போக நெற்பயிருக்கான நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் ஒரு போக நெற்பயிருக்கான நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
தேனி, உத்தமபாளையம் வட்டாரங்களிலுள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள கடந்த மாதம் பி.டி.ஆா். கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது.
விநாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ள இந்த நீரால் உத்தமபாளையம் வட்டாரத்தில் சின்னமனூா், சீப்பாலக்கோடை, வேப்பம்பட்டி பகுதியில் 830 ஏக்கா், தேனி வட்டாரத்தில் சீலையம்பட்டி, பூமலைக்குண்டு , தப்புக்குண்டு, தாடிச்சேரி என பாலகிருஷ்ணாபுரம் வரையில் 4,316 ஏக்கா் என மொத்தம் 5,146 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இதில், நேரடிப் பாசனமாக சீலையம்பட்டியில் 300 ஏக்கரில் ஒரு போக நெற்பயிா் சாகுபடி நடைபெறும். இப்பகுதியில் தற்போது நாற்றாங்கால் அமைத்து , நடவுப்பணிகளுக்காக நிலத்தை சீா் செய்து தயாா்படுத்தி வருகின்றனா்.