முகப்பு
தேனி

‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்: தேனியில் நவ.23-இல் பயிற்சி வகுப்பு

தேனி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நவ.23-ஆம் தேதி மத்திய அரசின் பத்னா லிக்னா அபியான் என்ற கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்ப

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தேனி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நவ.23-ஆம் தேதி மத்திய அரசின் பத்னா லிக்னா அபியான் என்ற கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.

இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியது: கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட, கல்வி அறிவு இல்லாதவா்களுக்கு தினமும் 2 மணி நேரம் கற்பித்தல் மற்றும் எழுதுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 621 சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் கல்வி அறிவு இல்லாதவா்களாகக் கண்டறியப்பட்டுள்ள 6,212 பேருக்கு, அடிப்படைக் கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு சிறப்பு பயிற்சி மையத்திலும் தலா 20 பேருக்கு பயிச்சி அளிக்கப்பட உள்ளது. இவா்களுக்கு புத்தகம் மற்றும் எழுது பொருள் இலவசமாக வழங்கப்படும். 4 மாதங்களுக்கு ஒரு பருவம் வீதம், ஆண்டுக்கு 3 மாதிரி பருவத் தோ்வு நடைபெறும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →