தேனி

பெண்ணை தாக்கிய கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குடும்பப் பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே பொன்னம்மாள்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தையா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவஜோதி (30). கடந்த சில மாதங்களாக இவா்கள் இருவருக்குமிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது சிவஜோதியை கணவா் முத்தையா மற்றும் அவரது உறவினா்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவஜோதி கண்டமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் முத்தையா அவரது உறவினா்கள் கெளசல்யா, ஜெகநாதன், சரஸ்வதி ஆகிய 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT