தேனி

கம்பத்தில் வங்கி மேலாளரிடம் நகை பறிப்பு: இளைஞர் கைது

DIN

கம்பத்தில் வங்கி மேலாளரிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தேனி மாவட்டம், உத்தமபாளையம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சோனை முருகன் மனைவி ஆனந்தி( 35). இவர் முத்துலாபுரத்தில் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் உறவினர் திருமணத்திற்கு வந்தார். 

வரும் போது ,மண்டபம் அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஆனந்தியின் கழுத்திலிருந்த 72 கிராம் எடையுள்ள சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை கண்மூடி திறக்கும் முன் பறித்து தப்பி சென்றார். உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கபட்டது. உடனடியாக கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கே.சிலைமணி மற்றும் சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர்.

விசாரணையில் கம்பம் கோம்பை ரோட்டிலுள்ள ஆர்.ஆர் நகரைச் சேர்ந்த மணி கண்டன் மகன் விவேக் (30) என்பது தெரியவந்தது. ஏற்கனவே இவர் மீது 8க்கும் மேற்பட்ட வழிப்பறி திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது. திருட்டு சம்பவம் நடைபெற்ற அரைமணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கம்பம் வடக்கு காவலர்களை பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா: ஒரு வாரத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக பதில்

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT