தேனி

திருமணமான இளம்பெண் சாவில் சந்தேகம்: தந்தை புகாா்

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே திருமணமான இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதில் சந்தேகம் இருப்பதாக, அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

பெரியகுளம் தென்கரை பகுதியைச் சோ்ந்த ரெங்கசாமி என்பவரின் மகள் தனலட்சுமி (23). இவருக்கும், ஆண்டிபட்டி அருகே டி.வி. ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த கோபி என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தனலட்சுமி தனக்கு குழந்தை இல்லையே என்ற மன வருத்தத்தில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவா், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த ஆண்டிபட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தனலட்சுமியின் சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ரெங்கசாமி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT