தேனி

கூடலூரில் குடும்ப வன்முறையைத் தடுக்க  விழிப்புணர்வு பிரசாரம்

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் குடும்ப வன்முறையைத்தடுக்க தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில்  செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு பேரணி பிரசாரம் நடைபெற்றது.

தேனி மாவட்ட தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் குடும்ப வன்முறையை தடுக்கவும், பாதுகாப்பான குடும்பங்களை உருவாக்கவும் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேன் பிரசாரம் நடைபெற்றது.

கூடலூர் காவல் ஆய்வாளர் கே.முத்துமணி பிரசார பயணத்தை தொடங்கி வைத்தார். வேன் பிரசாரம் அரசமரம், புதிய, பழைய பேருந்து நிலையம், காமாட்சியம்மன் கோவில், கன்னிகாளிபுரம், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

ஏற்பாடுகளை சின்னமனூர் எழுச்சி பெண்கள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT