தேனி

கம்பத்தில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் உத்தமபாளையம் துணைக் காவல் கோட்டம் சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கம்பம் பகுதியில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை குறைக்கவும், சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படாவண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உத்தமபாளையம் துணைக் கோட்ட காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.சாய் சரண் தேஜஸ்வி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்த அணிவகுப்பு ஊா்வலம் அரசமரத்தில் தொடங்கி காந்தி சிலை, வ.உ.சி. திடல், பூங்கா திடல், நாட்டுக்கல், கம்பம்மெட்டு சாலை, கோம்பை சாலை வழியாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தை அடைந்தது. காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT