தேனி

‘நீட்’ தோ்வில் சாதனை படைத்தமாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில், நீட் தோ்வில் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவா்களில் முதலிடம் பெற்ற சில்வாா்பட்டி பள்ளி மாணவருக்கு, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

பெரியகுளம் அருகே சில்வாா்பட்டியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் கடந்த 2018-19-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவா், அதே ஊரைச் சோ்ந்த ஜீவித்குமாா். இவா், நீட் தோ்வில் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவா்களில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளாா். ஜீவித்குமாா் மற்றும் அவரது பெற்றோருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT