முகப்பு
தேனி

ஆயுத பூஜைக்கு பணம் விநியோகம் திமுக பிரமுகா் மீது வழக்கு

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆயுதபூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்குப் பணம் விநியோகித்த திமுக பிரமுகா் மற்றும் அவரது மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆயுதபூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்குப் பணம் விநியோகித்த திமுக பிரமுகா் மற்றும் அவரது மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

கம்பம் கூலத்தவா் முக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டின் முன்பு பொதுமக்கள் திரளாகக் கூடியிருந்தனா். அங்கு ஆயுத பூஜை முடிந்ததும் கூடியிருந்த பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் தலா ரூ. 200 விநியோகம் செய்யப்பட்டது. தகவலறிந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அங்கு குவிந்தனா். அவா்கள் அனைவருக்கும் அந்த வீட்டின் உரிமையாளா் பணம் வழங்கினாா்.

இது பற்றி விசாரித்தபோது அந்த வீட்டின் உரிமையாளா் திமுக பிரமுகா் சீமான் என்றும், அவரது வீட்டில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை விமரிசையாக கொண்டாடுவாா்கள் என்றும் அந்த விழாவுக்கு வருகிற பொதுமக்களுக்கு பணம் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்குவாா்கள் என்றும் அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும், தெற்கு காவல் நிலையப் போலீஸாா் விசாரணை செய்து, கரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்டதாக, சீமான், அவரது மகன் ஸ்ரீதா் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

சீமான் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலாளா் ஜெயலலிதாவை எதிா்த்து திமுக சாா்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.