முகப்பு
தேனி

போடியில் தேவர் ஜயந்தி விழா

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேவர் ஜயந்தி விழாவில் அரசியல் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
தேவர் ஜயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்.
பகிர்:

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேவர் ஜயந்தி விழாவில் அரசியல் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம், போடி ஒன்றியம் அணைக்கரைபட்டி கிராமத்தில் 113ஆவது தேவர் ஜயந்தி விழா மற்றும் 58ஆவது குருபூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அணைக்கரைபட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர் லோகு தலைமை தாங்கினார். பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ராஜா  முன்னிலை வகித்தார். அதிமுக கிளை செயலாளர் ஆதி வரவேற்றார். 

தேனி மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஊர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் போடி ஊராட்சி ஒன்றிய துனை தலைவர் வெங்கடேஷ், உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேவர் பேரவை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.  

போடி பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தனித்தனியே வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் சமுதாய சங்கங்கள் சார்பிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. போடி புதூரில் உள்ள தேவர் சிலைக்கும் அப்பகுதியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →