தேனி

ஆண்டிபட்டியில் பாஜக உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பாஜக இணைந்த புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஆண்டிபட்டி நகரத் தலைவா் பால்பாண்டி தலைமை வகித்தாா். தேனி மாவட்ட பாஜக தலைவா் பி.சி. பாண்டியன் முன்னிலை வகித்து உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையை வழங்கினாா்.

மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில்குமாா், ஆண்டிபட்டி நகர துணைத் தலைவா் ராஜா, நகர பொதுச் செயலாளா் எஸ்.எம். ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT