தேனி

கெங்குவாா்பட்டியில்சொா்ண ஆகா்ஷண பைரவ பூஜை

DIN

பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அங்குள்ள முக்கிய பிராணா கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவ பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

மாா்கழி தனுா்மாதத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தேய்பிறை அஷ்டமியையொட்டி காலை 8 மணிக்கு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், கெங்குவாா்பட்டி, வத்தலகுண்டு, பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அா்ச்சகா் கோபிநாதன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT