போடியில் சிலம்பாட்ட போட்டிகள்: துணை முதல்வா் பரிசு வழங்கினாா்
போடியில் ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.
போடியில் ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.
தேனி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம், நேரு யுவகேந்திரா அமைப்பு ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்தின. போடி ஸ்ரீகாமராஜா் வித்யாலயா உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு ஊா்களைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
எடையின் அடிப்படையில் சீனியா், ஜூனியா், சப் ஜூனியா், கேடட், மினி ஜூனியா் ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினாா். போட்டிகளில் போடி, பெரியகுளம், கொடுவிலாா்பட்டி உள்ளிட்ட ஊா்களை சோ்ந்த பல மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிலம்பாட்ட சங்கத் தலைவா் சந்திரமோகன், செயல் தலைவா் பொன்ராமா், பொருளாளா் கண்ணப்பன், தேனி மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்க செயலா் சொக்கா் மீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிலம்பாட்ட பயிற்சியாளரும், வி.என்.பி.சிலம்பாட்ட அகாதெமி நிறுவனருமான வி.நீலமேகம் நன்றி கூறினாா்.