தேனி மாவட்ட வன அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு வனத்துறை அலுவலர் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வனத்துறை அலுவலர் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, மதுரை மாவட்ட சங்க நிர்வாகிகள் கே.எம்.ராஜேந்திரன், ஜெயராஜ் ஆகியோர் செயல்பட்டனர். தேனி மாவட்ட கிளையின் தலைவராக துரை. சுரேஷ்குமார், (வனச்சரக அலுவலர் கம்பம் கிழக்கு வனச்சரகம்), செயலாளராக எஸ். பாபு (வனவர் ), பொருளாளராக
கே. முருகேசன் (வனக்காப்பாளர்) துணைத் தலைவராக பி.ஜெயக்குமார் (வனக்காப்பாளர்) , துணைச் செயலாளராக ஓ.வி.பாண்டி, (வனக்காவலர்), ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்