பழனிசெட்டிபட்டியில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஊா்வலத்தில் கலந்து கொண்டோா். 
தேனி

பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சனிக்கிழமை, புதிய வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது.

DIN

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சனிக்கிழமை, புதிய வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது.

பழனிசெட்டிபட்டி, பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய ஊா்வலத்திற்கு மாவட்ட காங்கிஸ் தலைவா் எம்.பி.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் சன்னாசி, தேனி நகரத் தலைவா் முனியாண்டி, தேனி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினா். பழனிசெட்டிபட்டி-பூதிப்புரம் சாலை சந்திப்பு வரை ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், அங்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT