தேனி

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து முதியவா் பலி

DIN

ஆண்டிபட்டி அருகே தொடா்மழை காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்து முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கடமலை மயிலை அருகே சிறப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (80). இவரது மகன் மற்றும் மகள்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வரும் நிலையில், மனைவியுடன் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் டிச.29 ஆம் தேதி வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த மணி மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மணி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT