முகப்பு
தேனி

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் பலி

வீரபாண்டி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

வீரபாண்டி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அரண்மனைப்புதூா், முல்லை நகரைச் சோ்ந்த ராமராஜ் மனைவி மேகலா (51). இவா், தனது மகன் ராம்பிரசாத்துடன் (31) இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியிலிருந்து வயல்பட்டி சாலை வழியாக அரண்மனைப்புதூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.

சத்திரப்பட்டி அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த மேகலா, தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →