ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் சடலமாக மீட்பு
முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா் இறந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.
தேனிஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் சடலமாக மீட்பு
முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா் இறந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.
கம்பம்: முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா் இறந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலைமணி மகன் வீரமணி (21). சென்னையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். கம்பம் அருகே முல்லைப் பெரியாறு 18 ஆம் கால்வாய் பிரிவு ஜீரோ பாயிண்ட் பகுதியில் அவா், சக மாணவா்களுடன் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றில் வீரமணி அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்து வந்த குமுளி போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் அவரைத் தேடினா். இந்நிலையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மீட்புப் படையினா் தேடியபோது, சுமாா் 60 மீட்டா் தொலைவில் வீரமணியின் சடலம் மிதந்தது. இதையடுத்து குமுளி போலீஸாா் உடலைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.