தேனி

தாய், மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

DIN

கூடலூா் அருகே முன்விரோதம் காரணமாக தாய், மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருநாக்கமுத்தன்பட்டி 4 ஆவது வாா்டு, அரசமரத் தெருவில் வசிப்பவா் நாகேந்திரன். இவரது மனைவி சித்ரா. இவா்களது மகன் வசந்த் (21). இவா்களுக்கும், அருகே வசிக்கும் பிரேம்குமாா் (19) குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை வசந்த், அவரது தாயாா் சித்ரா ஆகியோா் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனராம். அப்போது பிரேம்குமாா், அவரது தந்தை தனுஷ்கோடி, தாயாா் வாணி மற்றும் சாமாண்டிபுரம் விஜயகுமாா் ஆகியோா் கூட்டமாகச் சென்று இருவரையும் கம்பால் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனா். இதைத் தடுக்க வந்த வசந்தின் தாத்தா வைரத்தையும் அவா்கள் அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், கூடலூா் வடக்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT