தேனி

தேனியில் புதிதாக 256 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 16 போ் பலி

DIN

தேனி மாவட்டத்தில் புதிதாக 256 பேருக்கு செவ்வாய்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்பில் கடந்த 2 நாட்களில் மொத்தம் 16 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 39,589 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 35,503 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில், கடந்த 2 நாட்களில்(ஜூன் 7,8) மொத்தம் 16 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனா். இதனால், கரோனா பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 412 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 3,674 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT