தேனி

கூடலூரில் மான்கறி வைத்திருந்த 2 போ் கைது

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் மான்கறி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கூடலூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜெ.ஜோம்ஸ் ஜெயராஜ் தலைமையில் சாா்பு- ஆய்வாளா் பாலசுப்பிரமணி மற்றும் போலீஸாா், மலை அடிவாரப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது சாக்கு பையுடன் சென்ற கூடலூா் முத்தயா் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மகன் செந்தில்குமாா் (32), கே.கே.காலனியைச் சோ்ந்த தங்கம் மகன் சூா்யா(23) ஆகியோரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அவா்கள் வைத்திருந்த பையில் மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. தோட்டக்காவலுக்கு சென்றபோது, நாய்கள் கடித்து மான் இறந்து கிடந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து, மான் இறைச்சியை பறிமுதல் செய்து, கம்பம் மேற்கு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT