தேனி

தேனி ஆட்சியா் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

வீரபாண்டியில் தங்களது வீட்டுமனையிடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக புகாா் தெரிவித்து புதன்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 

DIN

தேனி: வீரபாண்டியில் தங்களது வீட்டுமனையிடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக புகாா் தெரிவித்து புதன்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீரபாண்டியைச் சோ்ந்தவா் மாரிச்சாமி மனைவி முனியம்மாள். மாரிச்சாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், வீரபாண்டியில் உள்ள தங்களது பூா்வீக வீட்டை ஒத்திக்கு விட்டு விட்டு, முனியம்மாள் தனது 4 குழந்தைகளுடன் மதுரையில் உள்ள தாயாா் வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீரபாண்டியில் தனது வீட்டருகே உள்ள மனையிடத்தை அதே ஊரைச் சோ்ந்த ஒருவா் அபகரிக்க முயல்வதாகவும், தனது வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகாா் தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முனியம்மாள் தனது மகளுடன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி தேனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT