போடி: போடியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் புதன்கிழமை வன உயிரின தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் ரா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், வன விலங்குகள், மூலிகை செடிகள் மற்றும் செடி, கொடிகளை பாதுகாக்கவேண்டும். வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், இதுகுறித்து தங்களது பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியைகள் கௌரி, ஈஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.