பெரியகுளத்தில் பலத்த காற்று: மரம் விழுந்து வாகனம் சேதம்
பெரியகுளத்தில் இன்று வீசிய பலத்த காற்றால் மரம் விழுந்து வாகனம் சேதமடைந்தது.
பெரியகுளத்தில் இன்று வீசிய பலத்த காற்றால் மரம் விழுந்து வாகனம் சேதமடைந்தது.
தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று காலையிலிருந்து பெரியகுளம் பகுதியில் பலத்த காற்று மற்றும் சாரல் மழை பெய்தது.
மேலும் பலத்த காற்று காரணமாக வடகரை, சிஎஸ்ஐ சர்ச் அருகே நிறுத்தியிருந்த வாகனத்தின் மீது மரம் விழுந்து சேதமடைந்தது. தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது.