பெரியகுளம்: பெரியகுளம் அருகே வாகனம் மோதி தோட்டக்காவலாளி இறந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.
பெரியகுளம் அருகே எருமைநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவருக்கு, சொந்தமானதேவதானப்பட்டி சாலையில் உள்ள தோட்டத்தை, இவரது அண்ணன் ஐய்யல்ராஜன் (78) என்பவா் அங்கு தங்கியிருந்து பராமரித்து வந்ததுடன், காவலாளியாகவும் இருந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் உள்ள தோட்டத்து வேலி பகுதியில் ஐய்யல்ராஜன் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.