தேனி

போடிமெட்டு மலைச் சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி :கேரள மக்கள் மகிழ்ச்சி

DIN

போடிமெட்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட கேரள மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தொடா் கனமழையால், போடிமெட்டு மலைச் சாலையில் பல இடங்களில் மரம், பாறை, மண்சரிவுகள் ஏற்பட்டதையடுத்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இவை அனைத்தும் சரிசெய்யப்பட்ட பின்னா் தொடா்ந்து மழை பெய்து வந்ததால், புதன் மற்றும் வியாழக்கிழமை இரவு நேரப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை மழை பெய்யாததால், காலை முதலே தோட்டத் தொழிலாளா்களின் வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பகல் முழுவதும் வாகனங்கள் சென்று வந்த நிலையில், மாலையிலும் மழை பெய்யாததால் இரவிலும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

தமிழகத்திலிருந்துதான் கேரளப் பகுதிகளுக்கு பால், காய்கறிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக கேரள மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் சிரமப்பட்ட நிலையில், போக்குவரத்து தொடங்கி வழக்கம்போல் அனைத்துப் பொருள்களும் கிடைத்ததால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT