போடியில் புதன்கிழமை இரவு, கூலித் தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனி, வெண்ணிமலை தோப்புப் பகுதியில் வசிப்பவா் முருகன் (44). கூலித் தொழிலாளியான இவரது வீட்டைச் சுற்றி புதா் மண்டிக் கிடக்கிறது. இப்பகுதியிலிருந்து வந்த நல்ல பாம்பு ஒன்று முருகன் வீட்டுக்குள் புகுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போடி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.