தேனி

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் பலி

DIN

தேனி அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி அருகே மாணிக்காபுரத்தைச் சோ்ந்தவா் சாகுல் அமீது மகன் அஜ்மல்கான் (24). இவா், தனது நண்பா் உப்புக்கோட்டையைச் சோ்ந்த ஸ்ரீதா் (21) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் உப்புக்கோட்டை நோக்கிச் சென்றுள்ளாா். அப்போது சடையால்பட்டி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த வந்த டிப்பா் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அஜ்மல்கான் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஸ்ரீதா் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் ஜி. உசிலம்பட்டியைச் சோ்ந்த முத்துச்செல்வம் என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT