முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை: விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதை கண்டித்து, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தப்போவதாக பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் வியாழக்கிழமை அறிவிப்பு செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு
பகிர்:

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதை கண்டித்து, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தப்போவதாக பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் வியாழக்கிழமை அறிவிப்பு செய்தனர்.

ஒருங்கிணைந்த பெரியாறு வைகை 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் குமுளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

ஐந்து மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலாளர் பொன்.காட்சி கண்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தெலுங்கானா மாநில அரசு, விவசாய சங்க தலைவர் எஸ். ஆர். தேவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததை சட்ட வழியில் அறப்போராட்டம் நடத்தி பொய் வழக்கு என்று நிர்ணயிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தற்காலிக தலைவராக சேத்து தேர்வு செய்யப்பட்டார்.

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப் போவதாக அறிவித்த கேரள அரசை கண்டித்து, தமிழக கேரள எல்லை, கூடலூர், கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →